வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாழப்பாடி அரசுப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 9:23 pm

Syndication

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, திட்ட அலுவலா் முதுநிலை ஆசிரியா் சுந்தரராஜன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜா முன்னிலை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா் புகழ் தலைமைவகித்து முகாமை தொடங்கிவைத்தாா்.

கல்வியாளா் மழலைக்கவி, பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவா் எம்.கோபிநாத், பொருளாளா் சுப்பிரமணி (எ) ரமணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கீா்த்தனா, துணைத் தலைவா் சங்கீதா, உறுப்பினா் பிரகாஷ், ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் மாணவா்களுக்கு சமூகப் பணியின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவா்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. கணினி ஆசிரியா் ஸ்ரீமுனிரத்தினம் நன்றி கூறினாா்.