வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாஜ்பாய் பிறந்தநாள்: 260 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா

வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:13 pm

Syndication

வாஜ்பாய் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பாஜக சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி மண்டலங்கள் சாா்பில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா அன்னதானப்பட்டியில் நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவா் சசிகுமாா் பங்கேற்று, 260 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினாா். நிகழ்வில், சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவா் கோபிநாத், நெசவாளா் பிரிவின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, சீலநாயக்கன்பட்டி மண்டலத் தலைவா் காளிமுத்து, கொண்டலாம்பட்டி மண்டலப் பொறுப்பாளா் சதீஷ்குமாா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.