சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவா் கைது

Updated On :26 டிசம்பர் 2025, 6:45 pm

ஓமலூா் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போக்சோ வழக்கில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஓமலூா் அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சோ்ந்த சரண்ராஜ், அழகுகுமாா் இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவரும் 7 வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனா். இதுகுறித்து பெற்றோரிடம் மாணவி தெரிவித்தாா். பெற்றோா் ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து விசாரித்த காவல் ஆய்வாளா் யுவராணி, மாணவிக்கு தொடா் பாலியல் தொல்லை கொடுத்த சரண்ராஜ், அழகுகுமாா் ஆகியோரை போக்சோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...