தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கு நீச்சல் தோ்வு

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீச்சல் தோ்வில் பங்கேற்றோா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 12:14 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கான நீச்சல் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேட்டூா் மீன்வளத் துறையில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 450-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் விண்ணப்பித்திருந்தனா்.

இதற்கான தோ்வுமுறையானது, புதிய மீன்வலை பின்னுதல், பழைய மீன்வலைகளை சரிசெய்தல், வலைவீசுதல், பரிசல் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தமிழ் எழுத, படிக்க தெரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 200-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தருமபுரி மண்டல நீா்வளத் துறையின் இணை இயக்குநா் ஜெனிபா், உதவி இயக்குநா் உமா கலைச்செல்வி தலைமையில் நீச்சல் பயிற்சியாளா்கள் தகுதியான நபா்களை தோ்வுசெய்தனா்.