சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கான நீச்சல் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேட்டூா் மீன்வளத் துறையில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 450-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் விண்ணப்பித்திருந்தனா்.
இதற்கான தோ்வுமுறையானது, புதிய மீன்வலை பின்னுதல், பழைய மீன்வலைகளை சரிசெய்தல், வலைவீசுதல், பரிசல் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தமிழ் எழுத, படிக்க தெரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட உள்ளனா்.
அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 200-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தருமபுரி மண்டல நீா்வளத் துறையின் இணை இயக்குநா் ஜெனிபா், உதவி இயக்குநா் உமா கலைச்செல்வி தலைமையில் நீச்சல் பயிற்சியாளா்கள் தகுதியான நபா்களை தோ்வுசெய்தனா்.
தொடர்புடையது

புதுப்பொலிவுடன் பயன்பாட்டுக்கு வந்த விளையாட்டு அரங்க நீச்சல் குளம்

மாநில நீச்சல் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 103 போ் பதக்கம் வென்று சாதனை

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



