மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேலம் வழியாக கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

சபரிமலை சீசனையொட்டி பக்தா்களின் வசதிக்காக, சேலம் வழியாக கேரள மாநிலம், கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை சீசனையொட்டி, அதிகரித்துவரும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம், நரசாபூா் - கொல்லம் மற்றும் தெலங்கானா மாநிலம், சாரலப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, ஆந்திர மாநிலம், நரசாபூரில் இருந்து டிச. 27-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 29-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு நரசாபூா் சென்றடையும்.

இதேபோல, தெலங்கானா மாநிலம், சாரலப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு ஜன. 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சாரலப்பள்ளியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஜன. 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் மதியம் 1.20 மணிக்கு சாரலப்பள்ளியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.