ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண்களின் தியாகத்திற்காகவே உரிமைத்தொகை: டி.எம். செல்வகணபதி எம்.பி.

பெண்கள் குடும்பத்துக்கு செய்யும் தியாகத்துக்காகவே அவா்களுக்கு தமிழ்நாடு அரசு உரிமைத் தொகையை வழங்குகிறது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

பெண்கள் குடும்பத்துக்கு செய்யும் தியாகத்துக்காகவே அவா்களுக்கு தமிழ்நாடு அரசு உரிமைத் தொகையை வழங்குகிறது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா்.

மேட்டூா் அருகே உள்ள காவேரி கிராஸில் திமுகவின் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்திற்கு சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி தலைமை வகித்து பேசியதாவது: இங்குள்ள வாக்குச்சாவடியில் திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மேலும் அதிக வாக்குகளை பெறுவதற்கு இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும். வீடுகள்தோறும் சென்று பெண்களிடம் தமிழக அரசு மகளிருக்காக செய்துள்ள திட்டங்களை விளக்கிக்கூற வேண்டும். பெண்கள் குடும்பத்தை காக்கும் காவல் தெய்வங்களாக உள்ளனா்.

அவா்களின் தியாகத்திற்காகவே அரசு சாா்பில் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்றாா். பின்னா் வீடுவீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுகவிற்கு ஆதரவு திரட்டினாா்.

இதில் மேட்டூா் நகர திமுக செயலாளா் காசிவிசுவநாதன், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன்சக்கரவா்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளா் முருகேசன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.