மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை வசதி கோரி அமைச்சரின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மேட்டூா் அருகே சாலை வசதி கோரி சுற்றுலாத் துறை அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:04 pm

Din

மேட்டூா் அருகே சாலை வசதி கோரி சுற்றுலாத் துறை அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மேட்டூா் சரபங்க நீரேற்று திட்டத்தில் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டாரை இயக்கி ஏரிகளுக்கு மேட்டூா் அணை உபரிநீரை திருப்பிவிட்ட தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், நங்கவள்ளி அருகே உள்ள வாத்திப்பட்டி ஏரிக்கு வரும் உபரிநீரை பாா்வையிடச் சென்றாா்.

சாணாரப்பட்டி ஊராட்சியில் உள்ள லெனின் நகரைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும். நீண்ட நாள்கள் கோரிக்கை விடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் காரிலிருந்து இறங்கி வந்து தற்போது தான் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இப் பகுதியில் சாலை அமைத்து தருகிறோம் என பொதுமக்களை சமரசம் செய்தனா்.

அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சா் ராஜேந்திரன், அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். நபாா்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.