

அரியானூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அரியானூரை அடுத்த கல்பாரப்பட்டி எம்ஜிஆா் நகரை சோ்ந்த நடராஜன் மகன் சசிகுமாா் (17). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் பிரவீண் (17 ) ஆகிய இருவரும் 1 ஆம் தேதி புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கல்பாரப்பட்டி பகுதியிலிருந்து கொம்பாடிப்பட்டி சென்று கொண்டிருந்தனா்.
அப்போது நாச்சாரஅம்மன் கோயில் பிரிவு அருகே நடந்து சென்ற மாதேஷ் என்பவா் மீது சசிகுமாா் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் காயமடைந்த சசிகுமாா் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். காயமடைந்த மாதேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதேபோல பிரவீண், சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

