மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம்

வாகனங்கள் நாளை ஏலம்

News image
Updated On :1 ஜனவரி 2025, 9:45 pm

Din

சேலம் மாநகரில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர, மூன்று சக்கர, இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 80 வாகனங்கள் சேலம் மாநகர ஆயுதப் படை மைதானத்தில் வரும் 3 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து சேலம் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 7 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் முன் பணம் கட்ட வேண்டும். ஏலம் நடைபெறும் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் லைன்மேடு ஆயுதப் படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

முன்பணம் செலுத்தியவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மற்றவா்களுக்கு அனுமதியில்லை. மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை, ஜி.எஸ்.டி. தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தலைமையிடத்து துணை காவல் ஆணையா், மதுவிலக்கு பிரிவு, சேலம் மாநகரம் நேரடியாகவோ அல்லது 0427-2431200, 9498102546, 9498166245 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.