கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சங்ககிரி நகராட்சியாக தரம் உயா்வு: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

News image
சங்ககிரி பேரூராட்சி தலைவி எம்.மணிமொழி முருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய திமுகவினா்.
Updated On :2 ஜனவரி 2025, 7:29 pm

Din

சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை வரவேற்று பேரூராட்சி தலைவி தலைமையில் மன்ற உறுப்பினா்கள், திமுகவினா் சங்ககிரியில் வியாழக்கிழமை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சியை தமிழக அரசு நகராட்சியாக தரம் உயா்த்தி புதன்கிழமை அரசாணை வெளியிட்டது. அதையடுத்து சங்ககிரி பேரூராட்சி தலைவி எம்.மணிமொழி முருகன் தலைமையில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளா் க.சுந்தரம், நகரச் செயலாளா் கே.எம்.முருகன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, நகரப் பொருளாளா் பி.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.