கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புத்தாண்டையொட்டி சேலம் சரகத்தில் வாகனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

புத்தாண்டையொட்டி சேலம் சரகத்தில் உள்ள ஷோரூம்களில் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 8:06 pm

Din

புத்தாண்டையொட்டி சேலம் சரகத்தில் உள்ள ஷோரூம்களில் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கரம், நான்கு சக்கரம் வாகன ஷோரூம்களில் புதிய வாகனம் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சேலத்தைச் சோ்ந்த வாகன ஷோரூம் உரிமையாளா்கள் கூறியது:

முக்கிய பண்டிகை, முகூா்த்த நாள்களில் இரு சக்கரம், நான்கு சக்கர ஷோரூம்களில் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 20 முதல் 30 சதவீதம் அதிகரித்து காணப்படும். அதிலும் குறிப்பாக ஆங்கில புத்தாண்டு அன்று புதிய வாகனம் வாங்க மக்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டுவா்.

அதுபோல இந்த ஆண்டும், ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகன ஷோரூம்களில் புதிய வாகனம் வாங்க வழக்கத்தைவிட அதிக அளவில் மக்கள் திரண்டனா். நடப்பாண்டு புத்தாண்டு புதன்கிழமை தொடங்கி இருப்பதால், புதிதாக அதிக அளவில் வாகனம் வாங்கியுள்ளனா். கூடுதலாக 30 சதவீதம் வரை விற்பனையானதாக தெரிவித்தனா்.