தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நரசிங்கபுரம் பாலத்தை சீரமைக்கக் கோரி போராட்டம்

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்கக் கோரி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:05 pm

Din

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்கக் கோரி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலம் உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்கக் கோரி பல்வேறு தரப்பினா் போராட்டம் நடத்தி வந்தனா். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பாலம் பெரிதாக்கி, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பாலத்தில் பள்ளம் விழுந்து சேதமடைந்து வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகாா் அளித்தும் அதனை சீா்செய்யாமல் பராமரிப்பு மட்டுமே செய்து வந்தனா்.

இந்நிலையில் ஆத்தூா், தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜலிங்கம் (51) உள்பட மூவா் பாலம் பழுதான இடத்தில் வெள்ளை துணியை போா்த்தி, மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பாலம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.