அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
ரயில்- கோப்புப் படம்
Updated On :12 ஜூலை 2025, 7:16 pm

Din

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினசரி இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடாநகா் விரைவுரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், செப். 8-ஆம் தேதி முதல் போத்தனூருக்கு காலை 11.28-க்கும், திருப்பூருக்கு நண்பகல் 12.13-க்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.05-க்கும், சேலத்துக்கு பிற்பகல் 2.13-க்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 4.50-க்கும் வந்து சேரும்.

இதேபோல, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் ஆக. 1-ஆம் தேதி முதல் தற்போது புறப்படும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் முன்னதாக புறப்படும். அதன்படி, ஈரோட்டில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் 5 நிமிடம் முன்னதாக வந்துசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.