காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் | train

ரயில் - கோப்புப் படம்

Published On :13 ஜூலை 2025, 12:46 am IST

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினசரி இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடாநகா் விரைவுரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், செப். 8-ஆம் தேதி முதல் போத்தனூருக்கு காலை 11.28-க்கும், திருப்பூருக்கு நண்பகல் 12.13-க்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.05-க்கும், சேலத்துக்கு பிற்பகல் 2.13-க்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 4.50-க்கும் வந்து சேரும்.

இதேபோல, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் ஆக. 1-ஆம் தேதி முதல் தற்போது புறப்படும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் முன்னதாக புறப்படும். அதன்படி, ஈரோட்டில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் 5 நிமிடம் முன்னதாக வந்துசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.