பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில்

கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2025, 7:16 pm

Din

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினசரி இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடாநகா் விரைவுரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், செப். 8-ஆம் தேதி முதல் போத்தனூருக்கு காலை 11.28-க்கும், திருப்பூருக்கு நண்பகல் 12.13-க்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.05-க்கும், சேலத்துக்கு பிற்பகல் 2.13-க்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 4.50-க்கும் வந்து சேரும்.

இதேபோல, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் ஆக. 1-ஆம் தேதி முதல் தற்போது புறப்படும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் முன்னதாக புறப்படும். அதன்படி, ஈரோட்டில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் 5 நிமிடம் முன்னதாக வந்துசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.