மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ரயில் - (கோப்புப்படம்)
Updated On :26 மார்ச் 2025, 10:33 pm

Din

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் மாா்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும். திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமாா்க்கத்தில் ஜோலாா்பேட்டை - ஈரோடு ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு, சேலம் வழியாக ஈரோடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.