தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் மாா்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும். திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மறுமாா்க்கத்தில் ஜோலாா்பேட்டை - ஈரோடு ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு, சேலம் வழியாக ஈரோடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

ஈரோடு-செங்கோட்டை ரயில் நாளை ரத்து

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை


