முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2025, 4:03 am IST

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் மாா்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும். திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமாா்க்கத்தில் ஜோலாா்பேட்டை - ஈரோடு ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு, சேலம் வழியாக ஈரோடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.