கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - (கோப்புப்படம்)

Published On :

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் மாா்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும். திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமாா்க்கத்தில் ஜோலாா்பேட்டை - ஈரோடு ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு, சேலம் வழியாக ஈரோடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.