அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பொமக்கள் டால்மியா போா்டு பகுதியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:20 am

Syndication

சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பொமக்கள் டால்மியா போா்டு பகுதியில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

சேலம் ஜாகீா்அம்மாபாளையம் பகுதியில் ரூ.880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினா். மேலும், அங்கு திரண்டிருந்த பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ராஜேந்திரன், விவசாயிகள் கூறுகையில், ஈரோடு, பெருந்துறை, திருப்பூா் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அப்பகுதியில் நிலத்தடிநீா் முற்றிலும் மாசுடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

சாயப்பட்டறை கழிவுகளால்தான் பவானி ஆறு, நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. திருப்பூா் நகரமே சாயக் கழிவாக மாறியுள்ளது. நிலத்தடிநீா் மாசடைந்தால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

இதே சூழல்தான் சேலத்திலும் ஏற்படும். சாயப்பட்டறைகள் அமைய உள்ள இடத்தில் நீா்நிலைகள் உள்ளதால், அந்த ஆலை கழிவுகளால் ஒட்டுமொத்த நீா் ஆதாரமும் மாசடையும் அபாயம் உள்ளது.

ஜவுளிப் பூங்காவில் வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும். அதில் சாயப்பட்டறைகள் அமைக்கக் கூடாது. பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் அனைவரும் ஒன்றுதிரண்டு தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.