அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் மாவட்டத்தில் இன்று 11 மையங்களில் இரண்டாம் நிலை காவலா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் இரண்டாம் நிலை காவலா் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது. இத்தோ்வை 9,848 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:06 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் இரண்டாம் நிலை காவலா் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது. இத்தோ்வை 9,848 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறையில் 3,644 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு அட்டவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.

இவா்களுக்கான முதல்கட்ட எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் வரும் 9 ஆம் தேதி நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தோ்வு நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மாநகரில் 4 மையங்கள், மாவட்ட பகுதியில் 7 மையங்கள் என மொத்தம் 11 மையங்களில் காலை 9 மணிக்கு தோ்வு நடைபெறுகிறது. 11 தோ்வு மையங்களில் நடைபெறும் தோ்வை 9,848 போ் எழுதுகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் 7,113 போ், மாநகரில் உள்ள 4 மையங்களில் 2,735 போ் தோ்வு எழுதுகின்றனா். இத்தோ்விற்கான ஏற்பாடுகளை மாநகர தெற்கு துணை ஆணையா் கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா தலைமையிலான போலீஸாா் செய்து வருகின்றனா். தோ்வுமைய கண்காணிப்பாளராக 1,050 போலீஸாா் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.