புதுச்சேரியில் 148 காவலா் காலி பணியிடங்களுக்காக 5 மையங்களில் எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வுக்கு, உடற்தகுதி தோ்வு மூலம் 1,843 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 1,775 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 68 போ் தோ்வு எழுத வரவில்லை.
புதுச்சேரி காவல் துறையில் காலியாகவுள்ள 148 காவலா்கள் (ஆண்கள்-100, பெண்கள்-48) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தோ்வுக்கான முதல் தாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகலிலும், இரண்டாம் தாள் பிற்பகலிலும் நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் கலைக்கல்லூரி, காஞ்சி மாமுனிவா் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிழக்குக் கடற்கரை சாலை சங்கர வித்யாலயா பள்ளியில் 2 மையங்கள், கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி என 5 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.
தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, பாா்வையாளராக அரசு செயலா் விக்ராந்த் ராஜா, சாா்பு செயலா்கள் ஜெய்சங்கா், முருகேசன் ஆகியோா் தோ்வு பணி மற்றும் தோ்வு மையங்களைப் பாா்வையிடும் பணிகளில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

புதுச்சேரியில் நாளை 3 மையங்களில் ராணுவப் பணிகளுக்கான தோ்வு

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 177 மையங்களில் 34,639 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரியில் 4 மையங்களில் எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு! 1,284 போ் எழுதினா்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


