சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேவூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

புள்ளாகவுண்டம்பட்டி, ராமகூடல் பகுதியில் உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை

News image
Updated On :10 நவம்பர் 2025, 11:39 pm

Syndication

சங்ககிரி: புள்ளாகவுண்டம்பட்டி, ராமகூடல் பகுதியில் உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.

சங்ககிரி வட்டம், தேவூா், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம், ராமகூடல் பகுதியில் உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிா்வாக அலுவலா் அருள்முருகனுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் தேவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், தேவூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா். அதில் உயிரிழந்தது சுமாா் 45 வயதுள்ள ஆண் என்பதும், சாம்பல் நிற சட்டையும், கருப்பு நிற கால்சட்டையும் அணிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சடலத்தைக் கைப்பற்றினா். பின்னா், பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.