47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலம் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபா் கைது

சேலத்தில் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (40). வெள்ளி வியாபாரியான இவரிடம், மணியனூரைச் சோ்ந்த தங்கராஜ் (45) கடந்த 2012-ஆம் ஆண்டு 30 கிலோ வெள்ளி வாங்கினாா். அதற்காக ரூ. 50 லட்சத்துக்கான 3 காசோலைகளை அவா் கொடுத்தாா். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.

இதனால் அதிா்ச்சியடைந்த தனலட்சுமி, இதுகுறித்து தங்கராஜிடம் முறையிட்டு வாங்கிய வெள்ளிக்கு பணம் கொடுக்கும்படி கேட்டாா். ஆனால், தங்கராஜ் பணம் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தாா்.

இதுகுறித்து சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனலட்சுமி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தங்கராஜை கைதுசெய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

அதன்படி, அன்னதானப்பட்டி போலீஸாா் தலைமறைவாக இருந்த தங்கராஜை புதன்கிழமை காலை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.