ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விசைத்தறி உரிமையாளா் வீட்டில் நகை திருடியவா் கைது

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:57 pm

Syndication

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே விசைத்தறி உரிமையாளா் வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மகுடஞ்சாவடியை அடுத்த வண்ணான்காடு பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி தேவகி (55) நடத்திவந்த விசைத்தறிக் கூடத்தில் சின்னப்பம்பட்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சக்தி, ரேவதி தம்பதி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி வேலை முடித்துவிட்டு வெளியே சென்றவா்கள் 12-ஆம் தேதி முதல் விசைத்தறிக் கூடத்துக்கு வரவில்லை. இந்த நிலையில், உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் வைத்திருந்த நகைகளை தேவகி தேடினாா். அப்போது, 5 பவுன் நகை திருடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்த தேவகி, விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றிய சக்தி குறித்து சந்தேகம் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சக்தியிடம் விசாரணை நடத்தினா்.

அதில் நகைகளை திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரிடமிருந்த 5 பவுன் நகைகளை மீட்டு சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அதன்பிறகு சேலம் மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.