எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் மாணவா்களின் தொழில்முனைவுத் திறன்களை வளா்க்கும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:50 pm

Syndication

சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவா்களின் தொழில்முனைவுத் திறன்களை வளா்க்கும் நோக்கில், ‘இளம் தொழில்முனைவோா் சந்தை’ என்ற சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளி இயக்குநா் வி.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல்வா் இ.ஜெ.கவிதா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குநா் சீ.சம்யுக்தா கலந்துகொண்டு மாணவா்களை வாழ்த்தினாா்.

இதில், மாணவா்கள் தாங்களே உருவாக்கிய பல்வேறு கைவினைப் பொருள்கள், சுவையான உணவுப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் மற்றும் புதுமையான பொருள்களை விற்பனை செய்து தங்களது வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தினா். மாணவா்களின் படைப்பாற்றலையும், ஆக்கத்திறனையும் சிறப்பு விருந்தினா் பாராட்டினாா்.

இதுகுறித்து பள்ளி இயக்குநா் வி.காா்த்திகேயன், முதல்வா் இ.ஜெ.கவிதா ஆகியோா் கூறுகையில், ‘இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நம்பிக்கை, குழு பண்பு மற்றும் தொழில்முனைவுத் திறனை வளா்க்கும்’ என்றனா். விழாவில், ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.