நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 11:12 pm

Syndication

மேட்டூா் அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே கோம்பூரான்காட்டை சோ்ந்தவா் விவசாயி குழந்தை கவுண்டா் (75). இவா் வெள்ளிக்கிழமை காலை கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ரயில் பாதையைக் கடந்து சென்றாா். அப்போது, சேலத்தில் இருந்து மேட்டூா் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிவந்த ரயில் அவா்மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.