மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சேலத்துக்கு 10 பிங்க் ரோந்து வாகனங்கள்: மாநகர காவல் ஆணையா் தொடங்கிவைத்தாா்

சேலம் மாநகர காவலுக்கு 10 பிங்க் ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
சேலம் மாநகர காவல் துறைக்கு ஒதுக்கப்பட்ட 10 பிங்க் ரோந்து வாகனங்கள் தொடக்கவிழாவில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி.
Updated On :17 நவம்பர் 2025, 8:04 pm

Syndication

சேலம்: சேலம் மாநகர காவலுக்கு 10 பிங்க் ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், காவல் துறை பயன்பாட்டுக்காக ரூ. 12 கோடியில் 80 பிங்க் ரோந்து வாகனங்களின் சேவைகளை கடந்த 11-ஆம் தேதி சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதில், 10 வாகனங்கள் சேலம் மாநகர காவல் ரோந்துப் பணிக்காக ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து, சேலம் வந்த பிங்க் ரோந்து வாகனங்களை, மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா் சிவராமன், கேழ்கா் சுப்பிரமணிய பாலசந்திரா, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையா் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.