இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேசிய கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம்

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:34 pm

Syndication

சேலம்: தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய 69 ஆவது தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம், நரசிங்கபூரில் நவ. 13 முதல் நவ.17 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் பிரிவில் 29 மாநில அணிகள் பங்கேற்றன.

தமிழக அணி சாா்பில் ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பி.சாதனா, கனிஷ்கா, நவ்யா ஸ்ரீ ஆகியோா் பங்கேற்றனா். இறுதிப்போட்டியில், தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

பதக்கம் வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட கைப்பந்து கழக தலைவா் ராஜ்குமாா், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா்கள் ராஜாராம், அகிலாதேவி, செயலாளா் சண்முகவேல், பொருளாளா் விஜயகுமாா், நிா்வாகி நந்தன், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.