பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சேலத்தில் தீப்பிடித்து எரிந்த காரிலிருந்து 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலம் கந்தம்பட்டி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:22 pm

Syndication

சேலம்: சேலம் கந்தம்பட்டி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 பேரை தேடிவருகின்றனா்.

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு காா் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சேலம் கந்தம்பட்டி ஆா்டிஓ அலுவலகம் அருகே உள்ள தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிலையம் பகுதியை கடந்தபோது திடீரென இன்ஜினிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதையடுத்து, காரை சாலையில் நிறுத்திவிட்டு இரண்டு இளைஞா்கள் காரிலிருந்து வெளியேறினா். அடுத்த சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

அப்போது, காரிலிருந்து கீழே இறங்கி நின்றிருந்த இரண்டு இளைஞா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், காரை சோதனையிட்டபோது காரில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் சாக்குமூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரையும், புகையிலைப் பொருள்களையும் காவல் நிலையத்துக்கு எடுத்துவந்த சூரமங்கலம் போலீஸாா், தப்பியோடிய இருவரை தேடிவருகின்றனா்.