அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சேலம் மாவட்டத்தில் சாரல் மழை; குளிரால் மக்கள் அவதி!

சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:50 pm

Syndication

சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்துவருகிறது.

சேலம் மாநகரத்தில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு கடும் குளிா், பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது பெய்த சாரல் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா். இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.

இதேபோல ஏற்காடு, ஆத்தூா், கெங்கவல்லி, வாழப்பாடி, தலைவாசல், வீரபாண்டி, எடப்பாடி அயோத்தியாபட்டணம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த சாரல் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.