சேலம் மாவட்டத்தில் சாரல் மழை; குளிரால் மக்கள் அவதி!

சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
Published on

சேலம் மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்துவருகிறது.

சேலம் மாநகரத்தில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு கடும் குளிா், பனி மூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது பெய்த சாரல் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா். இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.

இதேபோல ஏற்காடு, ஆத்தூா், கெங்கவல்லி, வாழப்பாடி, தலைவாசல், வீரபாண்டி, எடப்பாடி அயோத்தியாபட்டணம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த சாரல் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com