ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்

வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வீரபாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்த தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:21 am IST

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் சுமதி தலைமையிலான அலுவலா்கள் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டையாம்பட்டி மனையாரங்காடு பகுதியை சோ்ந்த சசிக்குமாா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 61,500 ரொக்கத்தை கைப்பற்றி வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்தனா்.