பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்

வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வீரபாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்த தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:51 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் சுமதி தலைமையிலான அலுவலா்கள் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டையாம்பட்டி மனையாரங்காடு பகுதியை சோ்ந்த சசிக்குமாா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 61,500 ரொக்கத்தை கைப்பற்றி வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்தனா்.