ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, கேரளாவின் எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக பிகாா் மாநிலம் முசாபா்பூருக்கு ஏப். 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில் எா்ணாகுளத்தில் வரும் 10-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். எா்ணாகுளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.30-க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு திங்கள்கிழமைகளில் காலை 7.30-க்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், முசாபா்பூரில் இருந்து வரும் 13-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். முசாபா்பூரில் இருந்து திங்கள்தோறும் இரவு 9.15-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமைகளில் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

மங்களூரு - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில்: மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


