ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது

சங்ககிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

பாலசுப்ரமணியம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:54 pm

சங்ககிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பாலசுப்ரமணியம் (49) பாலியல் தொந்தரவு செய்வதாக அப்பள்ளி தலைமையாசிரியையிடம் மாணவிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தலைமையாசிரியை கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் எம்.எஸ். மாலதி புதன்கிழமை பள்ளிக்குச் சென்று 17 மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.

பின்னா், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலசுப்ரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போலீஸாா் விசாரணையில் ஆசிரியா் மீது சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே போக்ஸோ வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.