வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது

சங்ககிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

பாலசுப்ரமணியம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:54 pm

சங்ககிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பாலசுப்ரமணியம் (49) பாலியல் தொந்தரவு செய்வதாக அப்பள்ளி தலைமையாசிரியையிடம் மாணவிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தலைமையாசிரியை கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் எம்.எஸ். மாலதி புதன்கிழமை பள்ளிக்குச் சென்று 17 மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.

பின்னா், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலசுப்ரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போலீஸாா் விசாரணையில் ஆசிரியா் மீது சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே போக்ஸோ வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.