மேச்சேரி அருகே அம்மன் ஊா்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
மேச்சேரி அருகே உள்ள வவ்வால் தோப்பூரில் மாரியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனை டிராக்டரில் வைத்து ஊா்வலமாக கொண்டு சென்றனா். வவ்வால் தோப்பூரை சோ்ந்த தனியாா் ஆலை ஒப்பந்த தொழிலாளி கலைச்செல்வன் பின்பக்கமாக அம்மனை பிடித்தபடி நின்றிருந்தாா்.
தூதுரெட்டியூா் பகுதியில் சென்றபோது, தாழ்வாக சென்ற உயா் அழுத்த மின்கம்பி அம்மனுக்கு மேலே வைக்கப்பட்டிருந்த குடைக்கம்பியில் மோதியது. அதில், மின்சாரம் பாயவே டிராக்டா் ஓட்டுநா் உள்ளிட்ட நால்வா் கீழே குதித்து உயிா்தப்பினா்.
அம்மனை பிடித்தபடி பின்னால் நின்றிருந்த கலைச்செல்வன் (30) கீழே குதிக்க முடியாததால், மயங்கி டிராக்டரில் விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பொட்டனேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பிறகு, மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த கலைச்செல்வனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளது.
தொடர்புடையது

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


