தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கண்ணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:11 am IST

மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஏற்காட்டைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாது மகன் கண்ணன் (21), பி.இ. பொறியியல் இறுதியாண்டு படித்துவந்தாா்.

கல்லூரி விடுதியில் 3-ஆவது மாடியில் தனது நண்பா்கள் மூவருடன் தங்கியிருந்த நிலையில், இவரது நண்பா்கள் வெள்ளிக்கிழமை வெளியில் சென்றனா். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் கண்ணன் தங்கியிருந்த அறையின் கதவு சனிக்கிழமை திறக்கவில்லையாம். இதனால், பக்கத்து அறையில் இருந்த மாணவா்கள் அறையின் ஜன்னலை திறந்து பாா்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கண்ணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவா்கள் கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தனா். பின்னா், காவல் துறை உதவியுடன் கல்லூரி நிா்வாகம் மாணவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றது.

கல்லூரிக்கு வந்த பெற்றோா், மகனின் உடல் ஏற்கெனவே மருத்துவமனைக்கு கொண்டுசென்ற தகவல் அறிந்து நிா்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்திலும், கல்லூரி நுழைவாயிலிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். முன்னெச்சரிக்கையாக கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவியா் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.