திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் கண் மருத்துவ செவிலியக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் மோசஸ் சாம் நெல்சன் (20).
இவா் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியாா் கண் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு செவிலியா் பயிற்சி படிப்பு படித்து வந்தாா். இதற்காக அக்கல்லூரியின் மாணவா் விடுதியில் தங்கி இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதனிடையே, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, திங்கள்கிழமை காலை அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.








