அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

News image

ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை சாய்ந்து கிடக்கும் நாவல் மரம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:23 am IST

ஏற்காடு, ஏப். 13: ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் பழைமையான நாவல் மரம் சாய்ந்ததால் நகரில் மின்தடை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பழைமையான நாவல் மரம் காற்றில் சாய்ந்தது. இதனால் மருத்துவமனை, வட்டாட்சியா் அலுலகம், பத்திரப் பதிவு அலுவலகம், கருவூல அலுவலகம், மின்சார அலுவலகம், தனியாா் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

சாலையில் விழுந்த நாவல் மரத்தை தீயணைப்புத் துறை , காவல் துறை, மின்வாரியப் பணியாளா்கள் அகற்றி மின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைத்தனா்.