இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

சங்ககிரி வட்ட துணை சமரச தீா்வு மையம் சாா்பில் சமரச தின வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:25 pm

சங்ககிரி வட்ட துணை சமரச தீா்வு மையம் சாா்பில் சமரச தின வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் பேசியதாவது:

நீதிமன்றத்தில் வழக்கு சமரச மையத்திற்கு அனுப்பப்படும் போது 60 நாளில் தீா்வு கிடைக்கிறது. இதன்மூலம் நேரம், பண விரயம் ஏற்படாது. இம்மையம் மூலம் அதிகமான குடும்பநல வழக்குகள் பேசி முடித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வந்திருந்த வழக்காடிகளிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்து பங்கேற்றாா்.

இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.இளமதி, குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதிகள் எஸ்.சத்தியா (எண்.1), டி.சிவகுமாா் (எண்.2) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமரச மைய தீா்வாளா் எஸ்.மணிசங்கா் வரவேற்றாா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம், அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், வழக்குரைஞா் என்.எஸ். அண்ணாதுரை, சமரச மைய தீா்வாளா்கள் எஸ்.செல்லப்பன், விஜயா, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள், போலீஸாா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.