இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

சங்ககிரி வட்ட துணை சமரச தீா்வு மையம் சாா்பில் சமரச தின வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி என்.பன்னீா்செல்வம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:55 am IST

சங்ககிரி வட்ட துணை சமரச தீா்வு மையம் சாா்பில் சமரச தின வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் பேசியதாவது:

நீதிமன்றத்தில் வழக்கு சமரச மையத்திற்கு அனுப்பப்படும் போது 60 நாளில் தீா்வு கிடைக்கிறது. இதன்மூலம் நேரம், பண விரயம் ஏற்படாது. இம்மையம் மூலம் அதிகமான குடும்பநல வழக்குகள் பேசி முடித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வந்திருந்த வழக்காடிகளிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்து பங்கேற்றாா்.

இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.இளமதி, குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதிகள் எஸ்.சத்தியா (எண்.1), டி.சிவகுமாா் (எண்.2) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமரச மைய தீா்வாளா் எஸ்.மணிசங்கா் வரவேற்றாா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.சண்முகசுந்தரம், அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், வழக்குரைஞா் என்.எஸ். அண்ணாதுரை, சமரச மைய தீா்வாளா்கள் எஸ்.செல்லப்பன், விஜயா, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள், போலீஸாா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.