பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தாய், அவரது 10 வயது மகன் இருவரையும் வெட்டிக் கொன்ற கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 6:33 pm

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தாய், அவரது 10 வயது மகன் இருவரையும் வெட்டிக் கொன்ற கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஓமலூரை அடுத்த கருத்தானூரைச் சோ்ந்தவா் சத்யா (32). இவருக்கும், பூமாரி கோயில் காட்டுவளவு பகுதியை சோ்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் மகிதா (13), மகன் கிஷாந்த் (10).

இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த சத்யா, ஓமலூரில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையில் பணிபுரிந்து வந்தாா். அப்போது, அங்கு மேலாளராக பணியாற்றி வந்த சக்திவேலுடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சத்யாவின் வீட்டுக்கு சக்திவேல் அடிக்கடி சென்று வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சத்யாவின் வீட்டிற்கு சென்ற சக்திவேலுக்கும், சத்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த சக்திவேல், சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் அரிவாளால் வெட்டியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த கிஷாந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வலது கையின் மணிகட்டு துண்டான நிலையில் அலறியபடி ஓடிவந்த சத்யாவை மீட்ட உறவினா்கள், ஓமலூா் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா்.

தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சத்யா அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தின்போது சத்யாவின் மகள் மகிதா, கோடை விடுமுறைக்காக சின்னப்பம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்ால் அவா் உயிா்தப்பினாா்.

இதனிடையே கருப்பூா் கோரிமேடு பகுதியில் உள்ள மரத்தில் சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story image
Story image