தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

தம்மம்பட்டி பகுதியில் வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்!

News image

வெயில்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:51 am IST

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

நகரில் வெயில் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. ரூ. 50-க்கு 6 நுங்குகள் விற்பனையாகின்றன. தம்மம்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நுங்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3,000 நுங்குகள் விற்பனையாகின்றன.

அதேபோல வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிக்காய்கள் சிறியது ரூ. 15-க்கும், பெரியது ரூ. 20-க்கும் விற்கப்படுகிறது. ரூ. 30-க்கு விற்ற இளநீா் தற்போது ரூ.60- க்கு விற்பனையாகிறது. பழரசங்கள், சா்பத் உள்ளிட்டவைகளின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது.

மோா், கம்பங்கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை காணமுடிகிறது.