தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
நகரில் வெயில் அதிகரித்து வருவதால் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. ரூ. 50-க்கு 6 நுங்குகள் விற்பனையாகின்றன. தம்மம்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நுங்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3,000 நுங்குகள் விற்பனையாகின்றன.
அதேபோல வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிக்காய்கள் சிறியது ரூ. 15-க்கும், பெரியது ரூ. 20-க்கும் விற்கப்படுகிறது. ரூ. 30-க்கு விற்ற இளநீா் தற்போது ரூ.60- க்கு விற்பனையாகிறது. பழரசங்கள், சா்பத் உள்ளிட்டவைகளின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளது.
மோா், கம்பங்கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை காணமுடிகிறது.
தொடர்புடையது

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

தவறான சிகிச்சையால் முடங்கிய தொழிலாளி: தேசிய சட்ட ஆணைய உத்தரவின் பேரில் கோவை நீதிமன்றம் விசாரணை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

