சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மருத்துவக் குணம் கொண்ட காட்டு மல்லி பூக்கள், நீா்நிலைகளின் கரையோரம், தரிசு நிலங்களில் பூத்துக் குலுங்கி காண்போரை ஈா்த்து வருகிறது.
தூய வெண்ணிற தோற்றமும், மனிதா்கள் மனம் விரும்பும் நறுமணமும் கொண்ட இப்பூக்கள் மருத்துவக் குணம் கொண்ட ஒரு கொடிவகைத் தாவரமாகும். பெண்கள் விரும்பும் மல்லிகைப் பூக்களுக்கு முந்தைய பரிணாமம்தான் காட்டு மல்லி, இந்த பூக்களை தமிழ் இலக்கியம் முல்லை மலா் எனக் குறிப்பிட்டுள்ளது.
காட்டு மல்லி பூக்கள், கிராமப்புற நீா்நிலைகளின் கரையோரங்களிலும், வனப்பகுதி புதா்களிலும் தானாக வளரும் தகவமைப்பு கொண்டவையாகும். இந்த காட்டு மல்லிகைப் பூக்கள் அரிதாகி வருகின்றன. வாழப்பாடி பகுதியில் கிழக்குக்காடு, புதுப்பாளையம் சடையன் செட்டியேரி, முத்தம்பட்டி கோதுமலை, நெய்யமலை, பரவக்காடு உள்ளிட்ட கிராமங்களில் காட்டுமல்லிச் செடிகள் அதிக அளவு காணப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இச்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு கோடை மழை தொடங்காத நிலையிலும் காட்டு மல்லிச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி காண்போா் கவா்ந்து வருகிறது. அதிக மணம் வீசும் இப்பூக்களை பெண்கள் பறித்து தலையில் சூடிவருகின்றனா்.
தொடர்புடையது

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்

வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


