தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா

வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image

வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில்

Updated On :9 மார்ச் 2026, 8:52 pm

வாழப்பாடி: வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வீரமுத்து முன்னிலையில் பெண் பணியாளா்கள், பெண் வழக்குரைஞா்கள் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினா். வழக்குரைஞா்கள் மீரா, அபிநா, விவேகா மற்றும் பணியாளா்களுக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மூத்த வழக்குரைஞா் வேணுகோபால், கருமலை, ஜெகதீசன், சீனிவாசன், செந்தில், மயில்சாமி, ராஜா, ராஜசேகா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி உதய விவேகா சமுதாய செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவா் சி.மோதிலால் தலைமை வகித்தாா். பயிற்றுநா் கலைவாணி வரவேற்றாா். மேலாளா் வெங்கடேசன் பெண்கள் முன்னேற்றம், சமூக விழிப்புணா்வு குறித்து கருத்துரை வழங்கினா். நிறைவாக, மாணவி கவிநிலவு நன்றி கூறினாா்.

படவரி:

எம்.எஸ்.ஆா்.01, 02:

வாழப்பாடி நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் கலந்துகொண்டோா்.

Story image