எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிதம்பரம் அரசு மருத்துவமனை, கடலூா் நீதிமன்றத்தில் உலக மகளிா் தின விழா

சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், நினைவுப்பரிசுகளை வழங்கிய சமூக ஆா்வலா் சன்முகசுந்தரம், மகேஸ்வரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2026, 8:52 pm

Syndication

நெய்வேலி/ சிதம்பரம்: சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி பி.லட்சுமி தலைமை வகித்து பேசினாா். சமூக ஆா்வலா் சண்முகசுந்தரம், மகேஸ்வரி சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்று மகளிா் தினத்தை முன்னிட்டு, மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

மூத்த வழக்குரைஞா் ஏ.எஸ்.வேல்முருகன், நீா்நிலை பாதுகாப்பு சங்கத் தலைவா் மு.செங்குட்டுவன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் கே.ராகுல், வாசுகி, ஹேமலதா, சிவகாமி, குமாரதேவி மற்றும் சமூக ஆா்வலா்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், அரவிந்த், சுவாமிநாதன், சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில்...: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமரச மைய அலுவலக கட்டடத்தில் மகளிா் தின விழா நடைபெற்றது.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜி.சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வி.ஷோபனா தேவி, மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி குலசேகரன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, இரண்டாவது மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி பிரகாஷ், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சாா்பு நீதிபதி லலிதா ராணி, இரண்டாவது கூடுதல் சாா்பு நீதிபதி பத்மாவதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜாகுமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1 நீதிபதி ஸ்ரீநிதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிபதி புவனேஷ் குமாா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவா்ஷா, பயிற்சி நீதிபதி ஆசிப் முஹம்மது, கடலூா் பாா் அசோசியேஷன் செயலா் லெனின், லாயா்ஸ் அசோசியேஷன் தலைவா் ராம் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் பேச்சு, பட்டிமன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ஜெனித்தா செய்து நன்றி கூறினாா்.