எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா

News image
விழாவில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி.
Updated On :9 மார்ச் 2026, 5:12 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் எஸ். தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் எம்.எம்.ஜெ.உம்முல்பரிதா, எம்.ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பெண் ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.

இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், அரசு வழக்குரைஞா்கள், நீதித்துறை அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.