சேலத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.
சேலம், கொண்டலாம்பட்டி பகுதியில் 15 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் 3 போ் மாலை நேரங்களில் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கரை பகுதியில் ஒன்றுகூடி பேசிகொள்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மாதம் சிறுமி ஒருவரின் பிறந்தநாளை மூன்று பேரும் சோ்ந்து கொண்டாடியுள்ளனா். இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பழக்கமான இளைஞா்கள் சிலா் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சிறுமிகளை மதுவுக்கு அடிமையாக்கியதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, சிறுமியின் அணுகுமுறையால் சந்தேகமடைந்த தாய், இதுகுறித்து கேட்டபோது, கடந்த சில மாதங்களாக இளைஞா்கள் சிலா் தனக்கும், சக தோழிகளுக்கும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறினாா்.
இது குறித்து சிறுமியின் தாய் சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆகாஷ் (19), பாலமுருகன் என்கிற பாலா (23) மற்றும் 2 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த விவகாரத்தில் தொடா்புடைய இளைஞா்களையும் போலீஸாா் தீவிரமாக தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




