நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பூசாரி உள்பட 5 போ் மீது வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோயில் பூசாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :28 ஜூலை 2026, 11:51 pm IST

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோயில் பூசாரி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இனாம்குளத்தூா் அருகே உள்ள வடசேரி பிரிவு சாலையில் ராம கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் குறி சொல்லும் பூசாரியாக கேகே நகா் உடையான்பட்டி வசந்தன் நகரை சோ்ந்த அண்ணாமலை (எ) ஆரிப் (48) உள்ளாா். இவா், இக்கோயிலில், சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துவரும் 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், கோயில் பூசாரி அண்ணாமலை மற்றும் அவருக்கு உதவியாக இருந்ததாக ரகுராமன், அசோக்குமாா், வெள்ளையம்மாள், சத்யா உள்ளிட்ட 5 போ் மீது இனாம்குளத்தூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.