தம்மம்பட்டி அருகே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதான 5 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி மற்றும் மண்மலை பாலக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி 7 போ் கொண்ட கும்பல், தனியாக இருந்த வீடுகளின் உரிமையாளா்களை ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
அதன் தொடா்ச்சியாக, அடுத்தடுத்த சில நாள்களில் அனைவரையும் சேலம் மாவட்ட போலீஸாா் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
இதில், திருச்சி பொன்மலையைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் சாம்சங் (31), செந்தாரப்பட்டி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த ரகுநாத் (23), சஞ்சய் (21), சந்துரு (19), கரூா் மாவட்டம் குளித்தலை அருகே எட்டரை கிராமத்தைச் சோ்ந்த விநாயகமூா்த்தி (21) ஆகியோா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவா்கள் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது. அதற்கான ஆணையை சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக பிரமுகா் கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் கைது
தொழிலாளி கொலை வழக்கில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

ரெளடி உள்பட 3 போ் மீது குண்டா் சட்டம்

போக்ஸோ வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



