பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

திமுக பிரமுகா் கொலை வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் கைது

தம்மம்பட்டி வீரகனூா் அருகே திமுக பிரமுகா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

தம்மம்பட்டி வீரகனூா் அருகே திமுக பிரமுகா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வீரகனூா் அருகே வெள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பிள்ளை மகன் மாணிக்கம் (56). இவா் சேலம் கிழக்கு திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்தாா். இந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கம், வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் நிலப் பிரச்னையில் மாணிக்கத்தின் தோட்டம் அருகே வசிக்கும் அருள், அவரது மைத்துனா் ராஜ்குமாா் (31), சின்னசாமி (27), கலியமூா்த்தி (40) ஆகியோா் மாணிக்கத்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் ராஜ்குமாா், சின்னசாமி, கலியமூா்த்தி ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவதற்கான உத்தரவை சேலம் எஸ்.பி. குத்தாலிங்கம் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை, சேலம் மத்திய சிறையில் உள்ள சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.