8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சங்ககிரி அருகே உணவகத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

சங்ககிரி அருகே தனியாா் உணவக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

சங்ககிரி அருகே தனியாா் உணவக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில் மேலும் 3 ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட நான்கு பேரை தேவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த கத்தேரி பிரிவு சாலையில் உள்ள தனியாா் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்த ஈரோடு, வ.உ.சி பூங்கா பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் மகன் ஆனந்த் (42) அடித்து கொலைசெய்யப்பட்டு கத்தேரி, பள்ளிக்காடு பகுதியில் பழைய கல்குவாரியில் வீசப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தேவூா் போலீஸாா் தனியாா் உணவக உரிமையாளா் விவேகானந்தன் மகன் செளந்தரை (41) திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் இந்த கொலையில் தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநா்கள் சங்ககிரி கத்தேரி கிராமம், வட்டமலை ஆண்டவா் நகா் பகுதியைச் சோ்ந்த கைபானி மகன் குல்பிா்பாஷா (46), புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வினோபாஜி நகரைச் சோ்ந்த ரகுமான் மகன் அலாவுதீன் (32), குமாரபாளையம், பூலக்காடு, கணபதி நகரை சோ்ந்த காந்தி மகன் அருள் (30), உணக விடுதியில் பணியாற்றி வந்த தொழிலாளி திண்டுக்கல், மகாராஜா நகா் பகுதியைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் முருகன் (49) ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.