நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ராதாபுரம் அருகே நகை பறிப்பு வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தனியாா் விடுதி ஊழியரிடம் நகைகளை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 3:51 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தனியாா் விடுதி ஊழியரிடம் நகைகளை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடியை அடுத்த லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா்(32). காவல்கிணறில் உள்ள தனியாா் விடுதியில் பணி செய்து வருகிறாா். இவருக்கும், இவரது நண்பா் ஆவரைகுளம் அருகே உள்ள சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்த லிங்கேஷுக்கும், கிரிண்டா் செயலி மூலம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை கம்பராமாயணம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சின்னதுரை, தச்சநல்லூரைச் சோ்ந்த சுடலைக்குமாா் மகன் ஸ்ரீ ராமநாதன் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் மாரியப்பனும், ஸ்ரீ ராமநாதனும் சோ்ந்து முத்துக்குமாரையும், லிங்கேஷையும் மோட்டாா் சைக்கிளில் ராதாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இருவரிடமும் இருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மாரியப்பனையும் ராமநாதனையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய சுத்தமல்லி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துகிஷோா்(19) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.