லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மைசூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூரு- கண்ணூா் மற்றும் கண்ணூா்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூரு- கண்ணூா் மற்றும் கண்ணூா்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூரு- கண்ணூா் மற்றும் கண்ணூா்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, மைசூரு- கண்ணூா் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் மைசூரில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, கோழிக்கோடு வழியாக அடுத்த நாள் மாலை 5.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கண்ணூா்- பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே வரும் 30 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் கண்ணூரில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக அடுத்த நாள் காலை 10 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.