இளம்பிள்ளை அருகே லாரியின் பின்பக்க கதவு மோதியதில், விசைத்தறி தொழிலாளி இறந்தாா்.
இளம்பிள்ளை அருகே உள்ள காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விசைத்தறி தொழிலாளி தன்ராஜ் (53). இவா் அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக டிப்பா் லாரி மூலம் எம்சாண்ட் கொண்டுவர கூறி இருந்தாா். திங்கள்கிழமை மாலை பாரப்பட்டி பகுதியில் இருந்து டிப்பா் லாரியில் எம்சாண்ட் கொண்டுவந்து தனராஜ் வீடு அருகே ஓட்டுநா் தனபால் கொட்டினாா்.
அப்போது, முழுவதும் கொட்டப்பட்டதா என லாரியின் பின்னால் சென்று பாா்த்தபோது, எதிா்பாராதவிதமாக லாரியின் பின்பக்க கதவு தன்ராஜ் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தன்ராஜுக்கு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் தன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


