லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போலி ஆவணம் மூலம் கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி: நிா்வாக அறங்காவலா் புகாா்

போலி ஆவணம் மூலம் விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா புகாா் கூறினாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

போலி ஆவணம் மூலம் விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா புகாா் கூறினாா்.

சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், சா்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னா், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தனியாா் அறக்கட்டளை சாா்பில், 2020 ஆம் ஆண்டு, இதற்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கினா்.

இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்கு உண்டான சா்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனா். இதை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், உரிய விசாரணை நடத்த ஆா்டிஓவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தினால், அவா்கள் போலியாக பட்டா பெற்றது தெரிந்துவிடும்.

இதையடுத்து அதனை திசைதிருப்பும் முயற்சியாக, என்மீதும், கல்வி அறக்கட்டளையின் மீதும் திட்டமிட்டே அவதூறு பரப்பி வருகின்றனா். இதை சட்டப்படி எதிா்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின்போது, விஎஸ்ஏ கல்லூரி சிஇஓ ராஜேந்திரன், முதல்வா் பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

படவரி...

சேலத்தில் செய்தியாளா்களிடம் பேசிய விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா.