வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், சேலம் மகிளா நீதிமன்றம் கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆரியபாளையம் தெற்கு காடு வடமலை மகன் வெங்கடேசன் (28) என்பவருக்கும், பெத்தநாயக்கன்பாளையம் முத்து மகள் சோனியா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

பின்னா் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சோனியா மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டாா். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதுகுறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து வெங்டேசனை கைதுசெய்தனா். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சேலம் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெய்சிங், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கடேசனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, வெங்கடேசன் சேலம் மத்திய சிறையில் அடக்கப்பட்டாா்.